திங்கள், 14 அக்டோபர், 2013

இளையோருக்கு தகவல் தொடர்பு திறன் மிக அவசியம்

மரியாதைக்குரியவர்களே,
                               வணக்கம்.
                              ''இளைய   சமுதாயம்'' வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.
              வெவ்வேறு மொழிகளில்,தகவல் தொடர்புத்திறன் அவசியம் தேவைப்படுகிறது.அவ்வாறு வெவ்வேறு மொழிகளில் நமக்கு நல்ல திறமை இருக்கிறது என்ற நம்பிக்கை இருந்தால்தான் யாரையும் எதிர்பார்க்காமல் வாழ்க்கையில் எத்தகைய துணிச்சலான முடிவையும் எடுக்க முடியும்.அத்தில் வெற்றி பெற முடியும்.
நமது மாநில இளைஞர்களைப்பொறுத்தவரை ஆங்கிலத்திலும்,தமிழிலும் சிறப்பான தகவல் தொடர்புத்திறன் தேவைப்படுகிறது. போட்டி மிகுந்த இன்றைய உலகில் தகவல் தொடர்புத்திறன் அவசியம்.தற்போதைய உலகில் திறமைக்கு மட்டுமே முதலிடம் கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.அதனால் ஒவ்வொருவரும் தங்களது தகவல் தொடர்புத்திறனை மேம்படுத்திக்கொள்வது அவசியமாகிவிட்டது. உடனடி வேலைவாய்ப்புக்கான உத்தரவுகள் வழங்கப்படும் வேலைவாய்ப்பு மேளாக்களில் ஆப்டிடியூட் தேர்வும்,நேர்முகத்தேர்வும்தான் அடிப்படையாகும்.
         நேர்முகத்தேர்வானது ஆங்கிலத்தில்தான் நடத்தப்படுகிறது.ஆங்கிலத்தில் தகவல்தொடர்புத்திறன் என்பது கொஞ்சம் கடுமையான சோதனைதான்.ஆனால் இவற்றில் தேர்வு செய்யப்பட்டு வேலை பெறுபவர்களை கொஞ்சம் நுணுக்கமாக கவனித்தால் அவர்களிடம் அடிப்படை ஆங்கிலத்திறன் ஓரளவு இருப்பதை தவிர வேறு எந்தவோரு அளவிலும் மொழித்திறன் இருப்பதில்லை என்பது புரியும்.அடிப்படை ஆங்கிலத்திறன் என்பது தவறில்லாமல் வரிகளை எழுத,பேச முடிவதுதான்.மற்றவர்கள் பேசுவதை புரிந்துகொள்ளவும் வேண்டும்.
  அதைப்பெற என்ன வழி?ஆங்கில வார்த்தைகளை புதிது புதிதாக அறிந்துகொள்வது. அவற்றை வரிகளில் பயன்படுத்திப்பார்ப்பது..சொற்றொடர்களை  அறிந்து பயன்படுத்துவது. அடிப்படை ஆங்கில இலக்கணத்தில் போதிய திறன் பெற்று இருப்பது. இவை இருந்தாலே போதும்.ஆங்கிலத்தில் படிப்பதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும்.அடிக்கடி ஆங்கில உரையாடல்களை கேட்டு ஆங்கிலத்தோடு நல்ல பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.தொலைக்காட்சி,வானொலி போன்ற ஊடகங்களில் செய்திகளை கேட்டு பழகிக்கொள்ள வேண்டும்.ஆங்கிலத்தில் எழுதிப்பார்த்து தற்போதைய தரத்தை மதிப்பீடு செய்து கொள்ள வேண்டும்.அதற்காக ஆங்கிலத்தில் தினசரி ஏதாவது ஒரு தலைப்பில் ஒன்று அல்லது இரண்டு பத்திகள் எழுதிப்பார்த்து அதிலுள்ள தவறுகளை சரிபடுத்தி பார்த்துக்கொள்ள வேண்டும்.
             என 
          அன்பன்
   பரமேஸ்வரன் சி
       ( ஓட்டுனர்)                         http://konguthendral.blogspot.com
  தாளவாடி-ஈரோடு மாவட்டம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக