திங்கள், 14 அக்டோபர், 2013

இளையோரே ''உயர்வே குறிக்கோள்'' உணர்வீர்.

மரியாதைக்குரியவர்களே,
               வணக்கம்.''இளைய சமுதாயம்''வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.நாம் பேருந்தில் பயணம் செய்வதற்குக்கூட செல்லும் இடம் தெரிந்து இருக்க வேண்டும்.இல்லையேல் பேருந்தை விட்டு இறக்கிவிடப்படுவோம்.(அதாவது பயணம் செய்வது குறிக்கோள் என்றால்,செல்லும் இடம் இலக்கு ஆகும்.) எனவே வாழ்க்கைப்பயணத்திலும் குறிக்கோள் பற்றி தெரிந்து இருக்க வேண்டும். குறிக்கோள் இல்லாத வாழ்க்கை பயன்றற வாழ்க்கை ஆகும்.துடுப்பு இல்லாத படகில் பயணம் செய்யலாமா?எங்கே போய்க்கொண்டிருக்கிறோம் என்பதை அறிந்துகொண்டால் சேர வேண்டிய இடத்திற்கு விரைவாக செல்ல முடியும்.அதனால் குறிக்கோளும் பொதுவானதாக இருக்காமல் குறிப்பானதாக இருக்க வேண்டும்.நமது குறிக்கோளுக்கு தகுந்த சூழ்நிலை இல்லையென்றால் நாமே உருவாக்கிக்கொள்ள வேண்டும்.நமது குறிக்கோளுக்கு முதல் எதிரி முடியுமா?முடியாதா?என்ற தடுமாற்றமும் குழப்பமும்தான்.எனவே மனநிலையை தடுமாறாமல் ஒருநிலைப்படுத்திக்கள்ள வேண்டும்.சரியான பயிற்சியின் மூலம்தான் நினைவில் வைத்துக்கொள்ள முடியும்.சிறு குறிப்பேடு ஒன்று கையில் வைத்துக்கொண்டு தினசரிக்குறிப்பை எடுக்கக்கற்றுக்கொள்ள வேண்டும். குறிப்பெடுத்துக்கற்றல் மூலம் எளிதாக நினைவில்  வைத்துக்கொள்ள முடியும்.ஞாபக மறதியை தவிர்க்க நல்ல மருந்து முழுமையான கவனம்தாங்க.நேரம் நிர்வகித்தலும்,திட்டமிடலும்,அதனை சரியாக பயன்படுத்துதலும்தாங்க நமது குறிக்கோளை உயர்வுக்கு அழைத்து செல்லும்.
  சமூக நலனில் அக்கறையுள்ள
  உங்கள் ஓட்டுனர் 
     பரமேஸ்வரன்.C,
  தாளவாடி-
   ஈரோடு மாவட்டம்.    http://konguthendral.blogspot.com
     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக