திங்கள், 14 அக்டோபர், 2013

இளையோரே,படிப்பு என்பது என்னங்க?

மரியாதைக்குரியவர்களே,
                   வணக்கம்.
                             ''இளைய சமுதாயம்''வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன். படிப்பு என்பது என்னங்க?படிப்பு என்பது படிக்கும்போதே வேலைக்கான திறன்களையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதே! என்படை உணர்வீர்.
               படிப்பு என்பது நாம் வகுப்பறையில் கற்றுக்கொள்ள வேண்டிய விசயங்கள் மற்றும் பாடங்கள் ஒருவகை.அடுத்து வகுப்பைத்தாண்டி நம் கட்டுப்பாட்டில் உள்ள விசயங்களை முறைப்படுத்திக்கொள்வது இன்னொரு வகை.அதாவது போதை பொருட்களின் தீமைகளை அறிந்து அவற்றை தவிர்ப்பது.தனி மனித ஒழுக்கம் பற்றி உணர்வது,கலாச்சார சீரழிவு என்றால் என்ன ?என்பதனையும் அறிந்து அதற்கேற்ப நம் பண்பாட்டை காப்பது.பொது அறிவை வளர்க்க நூலகம் செல்வது.நூல்களை படிப்பது.வாசிக்கும் திறன்களை மேம்படுத்துவது.
                      படிப்பு என்பது மனதை ஒருமுகப்படுத்தும்,நினைவுத்திறனை அதிகரிக்கும்.அறிவையும்-கற்பனையையும் வளர்க்கும்.புதிய புதிய அர்த்தங்களை தந்து கொண்டே இருக்கும்.பட்டம் பதவி என்று இல்லாமல் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கும் சமாளிப்பதற்கும் படிக்க வேண்டும்.ஒன்றை ஏற்க அல்லது ஒதுக்க,விவாதித்து பேச,உலகை புரிந்துகொள்ள,மற்றவர்களுக்கு எடுத்து சொல்ல,அரிய பல தகவல்களை தெரிந்துகொள்ள,வாழ்க்கை முன்னேற்றத்திற்கான அனுபவங்கள்,அறிவியல் உண்மைகள்,நல்ல சிந்தனைகள்,தெரிந்து கொள்ள படிக்க வேண்டும்.
                      படிப்பிலும் இரண்டு வகை உள்ளன.ஒன்று ஆழ்ந்த படிப்பு இவ்வகை படிப்பு அன்றைய வருடத்தின் பொதுத்தேர்வுக்கு தேர்ச்சி பெற படிப்பது.(நன்கு மனப்பாடம் செய்வது) .மற்றொன்று அகன்ற படிப்பு இவ்வகை போட்டித்தேர்வு,பொது அறிவை வளர்க்க,உலக விசயங்களை நடப்பு நிகழ்வுகளை தெரிந்துகொள்ள நாளிதழ்கள்,மாத இதழ்கள்,புத்தகங்கள்,நாவல்கள் படிப்பது ஆகும்.
                ஒவ்வொருவரும் ஆண்டு ஒன்றிற்கு சராசரியாக இரண்டாயிரம் பக்கங்கள் படிக்க வேண்டும். என்று ''பன்னாட்டு அறிவியல் பண்பாட்டுக்கழகம்''பரிந்துரை செய்கிறது.ஆனால் நாம் ஆண்டு ஒன்றிற்கு முப்பது பக்கங்கள் மட்டுமே படிக்கிறோம் என''யுனஸ்கோ'' புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. 
                           எனவே நாம் தினசரி ஆறு பக்கங்களாவது -நாளிதழ்கள்,வார இதழ்,மாத இதழ்,முப்பருவ இதழ்,ஆண்டு இதழ்,நாவல்கள்,பொது அறிவு புத்தகங்கள்,கல்வி சார்ந்த வெளியீடுகள் என படிக்க முயற்சி எடுக்க வேண்டும்.புதிய தகவல்களையும்,சமுதாய மாற்றங்கள்,தொழில்நுட்ப வளர்ச்சி,நாட்டு நடப்பு போன்றவற்றையும் அறியும் விதத்தில் கற்கும் ஆற்றலை தொடர்ந்து மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.
                   மாற்றம் நிறைந்த உலகில் திறன்பட செயலாற்ற தொடர்ந்து படிக்க வேண்டும்.வேகமாக படிக்கவும்,விரைவாக எழுதவும் பழகிக்கொள்ளவும் வேண்டும்.பர்ஷனாலிட்டி டெவலப்மென்ட்,ஹெல்த் அண்ட் நியூட்ரிஷியன் உட்பட பல விசயங்களை தெரிந்து கொள்ள வேண்டும்.
                      சகிப்புத்தன்மை,பொறுமை,விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை,,இடத்தோடு ஒன்றிப்போதல்,பணிவு,விடாமுயற்சி ஆகியவனவற்றையும் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்.
 என்றும் சமூக நலனில் அக்கறையுள்ள
  உங்கள் ஓட்டுனர்
 பரமேஸ்வரன்.C
 தாளவாடி,
 ஈரோடு மாவட்டம்.
    http://konguthendral.blogspot.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக